இலங்கைசெய்திகள்

தடையுத்தரவிற்கு எதிர்மனு தாக்கல் செய்த முன்னாள் அரசியல் கைதி. செ.அரவிந்தன்!!

vavuniya

தடையுத்தரவிற்கு எதிராக எதிர்மனு தாக்கல். முன்னாள் அரசியல் கைதி. செ.அரவிந்தன் மாவீரர் தினத்தினை அனுஷ்டிப்பதற்கு எதிராக வழங்கப்பட்ட தடையுத்தரவிற்கு எதிராக எதிர்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் அரசியல் கைதி செல்வநாயகம் அரவிந்தன் தெரிவித்தார்.
வவுனியாவில் இன்று (22) எதிர்மனு தாக்கல் செய்துவிட்டு ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
மாவீரர் தினத்தினை அனுஸ்டிப்பதற்கு வவுனியா நீதிமன்றினால் 8 பேருக்கு தடை உத்தரவு வழங்கப்பட்டிருந்தது.

வவுனியா நீதிமன்றினால் 8 நபர்களுக்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவில் பிரதிவாதியாக கூறப்பட்டிருக்கின்ற செ.அரவிந்தனால் நேற்று (22) வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் எதிர் மனு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற  குறித்த வழக்கின்  முழுமையான தீர்ப்பு வருகின்ற புதன்கிழமை (24) வழங்கப்படும் என  நீதவானால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதேநேரம் பொலிசார் வீடுகளில் நினைவேந்தலை செய்வதற்கு தாங்கள் இடையூறாக இருக்க மாட்டோம் என்பதனை நீதிமன்றில் தெரிவித்துள்ளதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button