கவிதைசெய்திகள்முத்தமிழ் அரங்கம்.

சுனாமி – கவிதை!!

Tsunami

கரைத்த பிண்டங்களை
கடலலை பரிசளித்தது//

எதற்காகக் காத்திருக்கிறாய்
என்ற கேள்விகளையும் கேட்டது//

மணலில் மூழ்கிக் கிடந்த என்னால்
கொஞ்சி விளையாட, மனம் பித்தனாகவில்லை//

என் கீறல்களின் வலிகளை
உன் உப்பு காயமாற்றுமா?//

இல்லை எனில், எதற்காக என்னைக் கேட்கிறாய் என்றேன்//

கோபத்தில் என்னைப்போல் பிஞ்சு உள்ளங்களையும்
மாமிசமாக்கி மென்றது
அன்றொருநாள்…//

கருணையூர் கி. கிருத்திகன்

Related Articles

Leave a Reply

Back to top button