இலங்கைசெய்திகள்

தமிழக மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு!

பருத்தித்துறை கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 21 தமிழக மீனவர்களினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 31ஆம் திகதி பருத்தித்துறை கடற்பரப்புக்குள் அத்துமீறி 2 படகுகளில் நுழைந்த 21 தமிழக மீனவர்களை வடமராட்சி மீனவர்கள் சுற்றிவளைத்துத் தடுத்து வைத்திருந்தனர்.

வடமராட்சி மீனவர்களிடமிருந்து தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் பொறுப்பெடுத்து, 21 தமிழக மீனவர்களையும் கைதுசெய்தனர்.

அன்றைய தினம் கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் மறுநாள் பெப்ரவரி முதலாம் திகதி பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். அவர்களை இன்று 7ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்நிலையில், குறித்த வழக்கு இன்று அழைக்கப்பட்டபோது , 21 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button