இலங்கைசெய்திகள்

ஒன்பது சுயாதீன கட்சித் தலைவர்களைச் சந்தித்தார் சஜித் பிரேமதாச!!

Sajith

நாட்டில் ஜனாதிபதித் தெரிவு குறித்த சூழல் மிக உக்கிரமடைந்துள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) சுயாதீன கட்சிகளின் 9 தலைவர்களை நேற்று (18-07-2022) பிற்பகல் சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, புத்திக பத்திரன உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்களும், சுயாதீன கட்சிகளின் சார்பில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, கலாநிதி ஜி.வீரசிங்க, பிரேமநாத் தொலவத்த, வீரசுமன வீரசிங்க, கெவிந்து குமாரதுங்க, அசங்க நவரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

சஜித் பிரேமதாச, ஜனாதிபதி தெரிவில் தனக்கு கைகொடுக்குமாறு கேட்டுக்கொண்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Related Articles

Leave a Reply

Back to top button