கவிதை

நான் யாரோ? {கவிதை} – கோபிகை!!

poem

நான்
பட்டாம் பூச்சியின்
சின்ன இறக்கை
நான்
வானவில்லின்
வண்ண ஓவியம்
நான்
மலர்ச்சோலையின்
பூவிதழ்.
நான்
மேகமங்கையின்
மெல்லிய வர்ணம்.
நான்
பூமி வீசும்
அடர் பனி.
நான்
மலைமுகட்டின்
உச்சிப்புள்ளி.
நான்
வனாந்தரத்தின்
வறட்சிவெடிப்பு.
நான்
குயில் கூவும்
மெல்லிசை.
நான்
மழைக்கீற்றின்
சரிவான தூறல்,
நான்
மண் பேசும்
மகரந்த வாசனை.
நான்
மயில் ஆடும்
கதகளி.
நான்
விடியல் தேடும்
ஒற்றை நட்சத்திரம்.
நான்
இயற்கை நெய்த
பட்டுப்புடவை.
யாரோ நான்
யாரோ?

கோபிகை.

Related Articles

Leave a Reply

Back to top button