இலங்கைசெய்திகள்

சமுதிதவின் வீட்டில் எம்.பிக்கள்! – தாக்குதலுக்குக் கடும் கண்டனம்

வெள்ளை வானில் வந்த ஆயுததாரிகளின் தாக்குதலுக்குள்ளான சிரேஷ்ட சிங்கள ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் பிலியந்தலை வீட்டுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று தாக்குதல் சம்பவம் குறித்து சமுதிதவிடம் கேட்டறிந்தனர்.

அந்தவகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிக்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், காவிந்த ஜயவர்தன, கயந்த கருணாதிலக மற்றும் ஜே.வி.பியின் முன்னாள் எம்.பி. நளின் ஜயதிஸ்ஸ ஆகியோர் இன்று சமுதித சமரவிக்ரமவின் வீட்டுக்குச் சென்றனர்.

கல் வீச்சுத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட வீட்டின் பகுதிகளைப் பார்வையிட்ட எம்.பிக்கள், தாக்குதல் சம்பவத்துக்குக் கடும் கண்டனங்களையும் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Back to top button