இலங்கைசெய்திகள்

நெடுந்தீவில் மீனவரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் மீனவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்புத்துறைய – உதயபுரம் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவரின் சடலமே இன்று (17) காலை மீட்கப்பட்டுள்ளது.

குறித்த மீனவர் கொழும்புத்துறையில் இருந்து நேற்று (16) கடற்தொழிலுக்குச் சென்று இருந்த வேளையில் கடலில் வீழ்ந்து காணாமல் போயிருந்தார்.

இந்நிலையிலேயே, அவரது சடலம் இன்று காலை நெடுந்தீவு கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button