இலங்கைசெய்திகள்

கொடிகாமத்தில் துயரம் – புகையிரதம் மோதி சிறுவன் பலி இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் புகையிரதத்துடன் பட்டாரக வாகனம் மோதியதில் 12 வயது உடைய தனுஷன் என்ற சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், அவரின் தந்தையும், ஒரு சகோதரரும் படுகாயமடைந்துள்ளனர்.

இச்சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சங்கரத்தை, துணைவிப் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நாகமணி தயாபரன் மற்றும் அவரது பிள்ளைகளான வினுஷன் (வயது 15) படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மிருசுவில் வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள புகையிரதக்கடவையில் பட்டரக வாகனம் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button