இலங்கைசெய்திகள்

பசிலின் ஆட்டத்தை அடக்காவிட்டால் நாமலுக்கு அரசியல் எதிர்காலம் இல்லை – விமல் விரவன்ஸ

“பசில் ராஜபக்ச என்பவர் அரசியல் சூழ்ச்சிக்காரர் அவருடைய ஆட்டத்திற்கு முடிவு காட்டவிட்டால் நாமல்ராஜபக்ஷவிற்கு அரசியல் எதிர்காலம் இருக்காது” என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

“இரட்டை குடியுரிமைக் கொண்ட பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதற்கு நாம் கடும் எதிர்ப்பை வெளியிட்டோம். புதிய அரசமைப்பு ஊடாக இதற்கான ஏற்பாடு செய்யப்படும் என ஜனாதிபதி உறுதியளித்தார். அதனை நம்பினோம். ஆனால் அந்த உறுதிமொழி ஏமாற்றுப்பட்டுவிட்டது.


காமினி திஸாநாயக்க காலத்தில் மஹிந்தவுக்கு எதிராக தங்காலையில் போட்டியிட்டவர். 2015 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வி அடைந்த பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோரியவர். அதற்கு மஹிந்த ராஜபக்ச உடன்படவில்லை” என்றார்.

Related Articles

Leave a Reply

Back to top button