இலங்கைசெய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டத்தை தடைசெய்யும்கோரும் கையெழுத்துப் போராட்டம் கிளிநொச்சியில் முன்னெடுப்பு

பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக தடைசெய்யக்கோரி இலங்கை தமிழரசுகட்சியின் வாலிப முன்னணியினர் நாடுபூராகவும் கையெழுத்துப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

அவ்வகையில் இன்று (26) கிளிநொச்சி பொதுச்சந்தையில் பயங்கரவாதத்தை தடைசெய்யக்கோரும் கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றது.

இவ் கையெழுத்து போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், முன்னாள் வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராசா, கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி  பிரதேச சபையின் தவிசாளர்களான வேலமளிக்கித்தான், சுரேன்  மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Back to top button