இலங்கைதுயர் பகிர்தல்

இரண்டு வேளை உணவை உண்ண பழகிக்கொள்ளுங்கள் என்கிறார் ரணில் – இதைச் சொல்ல பிரதமர் தேவையா? அநுர ஆவேசம்

நாட்டு மக்களை இரண்டு வேளை சாப்பிட பழகிக் கொள்ளுங்கள் என கூற ஒரு பிரதமர் வேண்டுமா? என ஜே.வி.பி.யின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

” நாட்டில் இந்த நிலமையை உருவாக்கியவர்களை ரணில் மக்களுக்கு வெளிப்படுத்தமாட்டார். அவர்களை காப்பாற்றி வருகின்றார். ராஜபக்சாக்களைக் காப்பாற்றவே ரணில் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார். பதுங்கியிருந்த ராஜபக்சாக்களை வெளியில் வர ரணில் அனுமதித்துள்ளார்.

நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலமையில், ரணில் பேச்சாளாரகா மாறி, இரண்டு வேளை உணவைத்தான் உண்ண வேண்டும் என்கிறார். ஒரு வாரத்திற்குத்தான் டீசல் இருக்கிறது என்கிறார். மக்களை அழித்த பிறகு இரண்டு வேளை உண்ண பழகிக் கொள்ளுங்கள் என்கிறார் ரணில். இதைச் சொல்ல ஒரு பிரதமர் தேவையா? என்றார்.

Related Articles

Leave a Reply

Back to top button