இலங்கைசமீபத்திய செய்திகள்

குமுதினி படகு படுகொலை நினைவேந்தல் நிகழ்வு

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஊர்காவற்துறை கிளை ( தீவகம் ) ஏற்பாட்டில் நெடுந்தீவில் குமுதினி படகு படுகொலை 37 வது ஆண்டு நினைவேந்தல் இன்று (15) இடம்பெற்றது.

குமுதினி படகு படுகொலை நினேவேந்தல் நினைவுத்தூபியில் இறந்தவர்களுக்கு மலர்தூபி அஞ்சலி செலுத்தப்பட்டு, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. நினைவுத்தூபியின் பகுதியில் மரக்கன்றுகளும் நடப்பட்டன.

இவ் நினைவேந்தல் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் உதவி செயலாளர் எக்ஸ் . செல்வாநாயகம் , முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் , வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் , தமிழ் அரசுக் கட்சி மத்திய குழு உறுப்பினர் முத்துக்குமாரசுவாமி அகிலன் , தீவக சிவில் சமூக பொருளாளர் கருணாகரன் குணாளன் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

சூழலியல் மேப்பாட்டு அமைவனத்தினரால் ( சூழகம் ) நெடுந்தீவு மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்படும் நிகழ்வும் , மரநடுகையும் நடைபெற்றது.

Related Articles

Leave a Reply

Back to top button