இலங்கைசெய்திகள்

பரீட்சை சான்றிதழ்கள் வழங்கும் ஒருநாள் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்

பரீட்சை சான்றிதழ்களை வழங்கும் ஒருநாள் சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

எதிர்வரும் ஜனவரி (24) முதல் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எஸ்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, சான்றிதழ்களைப் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை இணைய அமைப்பு மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ செயலியான “DoE” மூலமாகவோ சமர்ப்பிக்கலாம்.

தேவைக்கு ஏற்ப, சான்றிதழ்கள் விரைவு அஞ்சல்(ஸ்பீட் போஸ்ட்) மூலம் வெளியுறவு அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு, விண்ணப்பதாரரின் முகவரிக்கு அனுப்பப்படும் என்று தர்மசேன குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button