இலங்கைசெய்திகள்

நிலாவெளியில் கரையொதுங்கிய இளைஞனின் சடலம்

திருகோணமலை நிலாவெளி கடற்கரையில் இளைஞன் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (16) நண்பர்களுடன் நீராடச் சென்ற வேளையில் இளைஞர் ஒருவர் காணாமல்போன நிலையில், தேடுதல் நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டன. எனினும் இளைஞனைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், இன்று (17) காலை குறித்த இளைஞன் சடலமாக கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலாவ – தம்பகஹவெல, பத்தியமுல்ல பகுதியைச் சேர்ந்த கே.என்.நளின் பிரியன்த (21 வயது) என்ற இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button