இலங்கைசெய்திகள்

யாழ்.மாவட்டம் செயலகம் முடக்கம் மீனவர்களின் போராட்டம் விஸ்வரூபம்

மீனவர்களின் போராட்டம் அடுத்தகடங்களை நோக்கி நகர்ந்து செல்கின்றது.

அண்மையில் வடமராட்சிப் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்கள் சடலங்களாக கரையொதுங்கியிருந்த நிலையில், இந்திய மீனவர்களே அவர்களை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் வெளியிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து வடமராட்சிப் பகுதியில் மீனவர்களால் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று (03) யாழ்.மாவட்ட செயலகம் முற்றாக முடக்கப்பட்டுள்ளதுடன் யாழ் – கண்டி பிரதான வீதியும் முடக்கப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தே இப்போராட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button