இலங்கைசெய்திகள்

ஆங்கில டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரிய நியமனம்!!

Teachers

கிழக்கு மாகாணத்தில் தேசிய உயர்கல்வி ஆங்கில டிப்ளோமா கற்கைநெறியை நிறைவுசெய்துள்ள 48 டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் இன்று இந்த நியமனங்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

2017ஆம் ஆண்டு தேசிய உயர்கல்வி ஆங்கில டிப்ளோமா கற்கைநெறியை நிறைவுசெய்த ஆங்கில டிப்ளோமாதாரிகள், கிழக்கு மாகாணத்தின் உரிய அதிகாரிகளிடம் தங்களது நியமனம் தொடர்பிலான கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

இந்தநிலையில், ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய அவர்களுக்கு இன்று ஆசிரிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button