கல்விசெய்திகள்புலமைச்சிகரம் அமரர் வே. அன்பழகன் நினைவான கல்வி பகுதி

ஆரம்பமாகிவிட்டது புலமைச்சிகரம் வே. அன்பழகன் ஞாபகார்த்த கருத்தரங்கு!!

Seminar

புலமைச்சிகரம் வே. அன்பழகன் ஞாபகார்த்த கருத்தரங்கு இன்று ஆரம்பமாகியுள்ளது. ஆசிரியர் திரு. ஜெயநேசன்( திருமலை ) அவர்களின் மாதிரி வினாத்தாள் இன்று {20. 11. 2022} எமது கருத்தரங்கு குழுமத்தில் பதிவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் பலரும் அதனைத் தரவிறக்கம் செய்து பயிற்சி செய்து வருகின்றனர்.

04 . 12. 2022 வரை இடம்பெறவுள்ள இக்கருத்தரங்கில் நாடு பூராகவுமுள்ள ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்து வருகின்றனர். இவ் இலவசக் கருத்தரங்கில் வரையறையற்ற மாணவர்கள் பங்கு பற்ற முடியும் என்பதைத் தெரிவிப்பதுடன், இக்கருத்தரங்கு 04.12.2022 வரை இடம்பெறவுள்ளதால், பங்குபற்ற விரும்பும் மாணவர்கள் கீழ் காணப்படும் இணைப்பின் மூலம் இணைந்துகொள்ள முடியும் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

பெற்றோருக்கான இன்றைய கருத்தரங்கு படிமுறைகள

1,)இன்று பிற்பகல் 4:30 க்கு வினாத்தாள்கள்(பகுதி 1+ பகுதி 11) குழுவில் பகிரப்பட்டுள்ளது.

2, நாளை இரவுக்குள் நீங்கள் பிரதி எடுத்து இரண்டு பகுதிகளையும் பிள்ளைகளுக்குக் கொடுத்து நேரம் கணித்து செய்விக்கவும்.

3, நாளை இரவு விடைகள் ( புள்ளியிடல் திட்டம் ) பகிரப்படும்.

4,மறுநாள் காலைக்குள் திருத்தவும்.

5,) 23 ஆம் திகதி மதியத்திற்குள் ( 12 மணிக்கு முன்பு )விளங்காத , பிழையான வினாக்களை (077) 236 5340 என்ற இலக்கத்திற்கு வட்சப் / வைபர் மூலம் அனுப்பவும்( உதாரணமாக பகுதி 1 இல் 20 ஆம் வினா எனில் p1-20 எனவும் பகுதி 2இல் 5 வது வினா எனில் p2-5 எனவும் அனுப்பவும்)

6, 23 ஆம் திகதி இரவு 8:00 மணிக்கு கருத்தரங்கு இடம் பெறும்.

7, நீங்கள் அனுப்பிய வினாக்களுக்கு மட்டும் குறித்த ஆசிரியரால் விளக்கமளிக்கப்படும். அத்துடன் உரிய ஆசிரியரின் ( ஜெயநேசனின் )எதிர்பார்ப்பு வினாப்பகுதிகள் தொடர்பிலும் கருத்தரங்கில் கலந்துரையாடப்படும்.

-பொறுப்பாசிரியர் –

https://chat.whatsapp.com/JXjuOs0RLirKa6aKv9cYAi

Related Articles

Leave a Reply

Back to top button