இலங்கைசெய்திகள்

பட்டப்பகலில் கொள்ளை – பொறளையில் சம்பவம்!!

robbery

இன்று(11) பிற்பகல் பொறளை நகரில் உள்ள நகையகம் ஒன்றில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

உந்துருளியில் வந்த இருவர் முகத்தை முழுமையாக மறைக்கும் வகையிலான முகக்கவசம் அணிந்து துப்பாக்கியால் வானை நோக்கிச் சுட்டு அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி இந்த கொள்ளையைப் புரிந்துள்ளனர்.

சம்பவ இடத்துக்குக் காவல்துறை செல்வதற்கு முன்னதாக அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து சந்தேகநபர்களை சீ.சீ.டிவி கெமாராவின்மூலம் அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைககள் எடுக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button