இலங்கைசெய்திகள்

பிரியந்த குடும்பத்திற்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினார் பாக். பிரதமர் இம்ரான்கான்!!

piriyantha

பாகிஸ்தான் − சியல்கோர்ட் பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, நூற்றுக்கணக்கானோரினால் தீ வைக்கப்பட்ட பிரியந்த குமார தியவடனவிற்கு, பாகிஸ்தான் அரசாங்கம் நட்டஈட்டை வழங்கியுள்ளது.

பிரியந்த குமார தியவடனவின் மனைவியின் வங்கி கணக்குக்கு பணம் பரிமாற்றப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கட்சியான PTI அறிவித்துள்ளது.

இதன்படி, 100,000 அமெரிக்க டொலர் அதாவது இலங்கை ரூபாவில் சுமார் 20252320.00 ரூபா மற்றும் அவரது முதல் மாத சம்பளமான 1667 அமெரிக்க டொலர் இலங்கை ரூபா பெருமதியில் 337606 பணம், பிரியந்த குமார தியவடனவின் மனைவியின் வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு வங்கி கணக்குக்கு வைப்பிலிட்டமைக்கான ஆவணங்களை PTI கட்சி, வெளியிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button