இலங்கைசெய்திகள்

தடை செய்யப்பட்ட நாடுகளில் இருந்து இரு வாரங்களாக எவரும் வரவில்லை – சுற்றுலாத்துறை அமைச்சர்!!

omicron

புதிதாகக் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் கொரோனா மாறுபாட்டின் அச்சுறுத்தல் காரணமாக, நாட்டுக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்ட ஆறு தென்னாபிரிக்க நாடுகளின் சுற்றுலாப் பயணிகள், கடந்த 14 நாட்களாக நாட்டுக்கு வரவில்லை என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

தென்னாபிரிக்கா, நமீபியா, போட்ஸ்வானா, சிம்பாப்வே, லெசோதோ மற்றும் சுவாசிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள், கடந்த 14 நாட்களாக நாட்டுக்கு வரவில்லை என்றும், ஒமிக்ரோன் மாறுபாடு காரணமாக, நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் நாட்டுக்குள் நுழைய அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 14 நாட்களில் இந்த நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் தவிர வேறு எவரும் நாட்டுக்கு வந்துள்ளார்களா என்பது குறித்து உரிய திணைக்களங்கள் ஆராயும் என்றும், அதற்கேற்ப சுகாதாரத்துறை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.

தடை செய்யப்பட்ட 6 நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்தத் தடையும் இல்லை என்றும், விசா வழங்கும்போது மேற்குறிப்பிட்ட பயணிகள் சம்பந்தப்பட்ட நாடுகளுக்குச் சென்றிருக்கிறார்களா என்பதை அதிகாரிகள் பரிசோதிப்பார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button