இலங்கைசெய்திகள்

அக்கரைப்பற்று ஆலயம் ஒன்றில் ஏற்பட்ட மோதலில் இளைஞன் பலி!!

Murder

அக்கரைப்பற்று – பனங்காடு பகுதியிலுள்ள பிரசித்தி பெற்ற ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற மோதலில் கத்திக்குத்துத் தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். 

ஆலயத்தில் வருடாந்த உற்சவத்தின்போது  காவடி தொடர்பாக இருவரிடையே வாக்குவாதம் முற்றியதையடுத்து 27 வயது இளைஞர் மீது 17 வயதுடைய சிறுவன் கத்திக்குத்துத் தாக்குதலை மேற்கொண்டுள்ளார். கத்திக்குத்துக்கு இலக்கானவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணித்துள்ளார்.

மேற்படி சம்பவத்தில்  அக்கரைப்பற்று – கண்ணகிபுரத்தைச் சேர்ந்த 27 வயதுடைய குமாரசிங்கம் சிறிதரன் என்பவரே  உயிரிழந்துள்ளார்.

தாக்குதலை மேற்கொண்ட 17 சிறுவன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்தது விளக்கமறியலில் வைக்ப்பட்டுள்ளார்.

அக்கரைப்பற்றுப் பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button