இந்தியாசெய்திகள்

மடிக்கணனி வெடித்து இளம்பெண் படுகாயம்!!

Laptop

மடிக்கணினியில் அலுவலகப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆந்திரா மாநிலம் மேகாவரி கிராமத்தைச் சேர்ந்த சுமலதா பெங்களூரில் உள்ள IT நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

இவர் தனது மடிக்கணினியில் அலுவலகப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது மடிக்கணினி வெடித்து தீப்பிடித்துள்ளது. இதில் படுகாயமடைந்த சுமலதா அலறியுள்ளார். மகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த அவரது பெற்றோர் தீக்காயத்துடன் இருந்த அவரை மீட்டு திருப்பதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மடிக்கணினியின் சார்ஜர் வெடித்து தீப்பிடித்துள்ளது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். IT பெண் ஊழியரின் மடிக்கணினி வெடித்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button