இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையம் அதி பரபரப்பில்!!

Katunayake Airport

அதிகளவிலான இலங்கை மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றமையால் கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையம் தற்போது பரபரப்புடன் காணப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கம், வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புக்காகச் செல்பவர்களுக்கு அதிக வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதன் காரணமாக, வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் மாணவர்கள் கல்வி கற்க வெளிநாடுகளை நோக்கி செல்லும் நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளது.

மேலும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை தங்கள் நாடுகளில் திரும்ப அழைப்பதன் காரணமாகவும் விமான நிலையம் பரபரப்பாக இயங்குவதாகவும் மக்கள் பாரிய அளவில் குவிந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எப்படியிருப்பினும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் உள்வரும் நுழைவு முனையம் பரபரப்பாக இல்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடியினால் இலங்கைக்குள் வரும் பயணிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button