இலங்கைசெய்திகள்

யாழில் பெண் பிள்ளையின் தகாத செயல் – பெற்றோரே அவதானம்!!

jaffna

தெல்லிப்பளையைச் சேர்ந்த யுவதி ஒருவர் , அளவுக்கதிகமான போதையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

குறித்த 20 வயது யுவதி, இடம்பார்ப்பதற்காக மண்டைதீவிற்குச் செல்வதாகத் தெரிவித்து வீட்டிலிருந்து சென்றுள்ளார். வீட்டிற்குத் திரும்பிய யுவதி சிறிது நேரத்தில் நிலத்தில் வீழ்ந்துள்ளார்.

பதறியடித்த தாயார் மயக்கமுற்று வீழ்ந்ததாகக் கருதி முச்சக்கர வண்டியில் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு யுவதியைக் கொண்டு சென்றுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி மயக்கமுற்று விழவில்லை எனவும், அவர் மது போதையில் வீழ்ந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து இன்று போதை தெளிந்த யுவதியிடம் மருத்துவர்கள் பொலிசார் விபரம் கோரியபோது, காதலுடன் பயணித்து எனது சுய விருப்பின் பெயரிலேயே மது அருந்தியதாக யுவதி கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button