![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/07/candiadates-tile-1658072912.jpg?resize=600%2C338&ssl=1)
இந்தியாவின் 15 வது புதிய ஜனாதிபதியாக திரௌபதி முர்மு தெரிவாகியுள்ளார். மொத்த வாக்கு மதிப்பில் 50 சதவீதத்திற்கு மேல் அவர் பெற்றுள்ளார்.
இந்தியாவில் இரண்டாவது பெண் ஜனாதிபதியும் முதலாவது பழங்குடி இன பெண் ஜனாதிபதியுமாக திரௌபதி முர்மு விளங்குகின்றார்.
புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு விழா யூலை 25 ம் திகதி நடைபெறவுள்ளது.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த்சின்கா போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.