இலங்கைசெய்திகள்

எரிபொருள் பிரச்சினை – போக்குவரத்துப் பணிகளும் பாதிப்பு!!

Fuel issue

Car refueling on petrol station. Man pumping gasoline oil. This photo can be used for automotive industry or transportation concept

நாட்டில் நிலவும் எரிபொருள் பிரச்சினை காரணமாக, பல்வேறு துறைகளின் போக்குவரத்து பணிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பயணிகள் பேருந்து சேவை மற்றும் பொருட்கள் போக்குவரத்துக்கான சேவைகள் உட்பட பல சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான சூழ்நிலையில், 50 சதவீதத்திற்கும் அதிகமான பேருந்துகள் சேவையிலிருந்து விலகியுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், நாளை முதல் பேருந்து சேவைகள் முழுமையாக முடங்கும் அபாயம் உள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ண தெரிவித்துள்ளார்.

தங்களுக்கு விரைவாக எரிபொருளை வழங்குமாறு போக்குவரத்து அமைச்சரிடம் நேற்று தொலைபேசி மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

எனினும், தற்போது வரையில் பேருந்துகளுக்கு எரிபொருள் கிடைக்காமையால், பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கெமுனு விஜேரட்ண தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button