![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/11/8-2.webp?resize=360%2C240&ssl=1)
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு காவல்துறை பிரிவிற்குட்பட்ட, 5 ஆம் வட்டாரம் திரிலிங்கபுரம் கடற்கரையில் சிதைவடைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
இந்த பகுதியைச் சேர்ந்த மீனவர்களால் குறித்த சடலம் தொடர்பில் இன்று (28) காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்ததாகவும் உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பில் காவல்துறை மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.