Breaking Newsஇலங்கைசெய்திகள்

யாழ். பருத்தித்துறையில் மீண்டும் கொரோனா!!

Covid - 19

 யாழ். பருத்தித்துறை பகுதியில் உள்ள பெண்ணொருவருக்கு கொரோனா  தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த சில தினங்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த இவருக்கு  எழுமாற்றாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில்  கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு ஊசிகள் போட்டுக்கொண்ட போதிலும் , உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதனால் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் எனயாழ்.போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளர் வைத்திய கலாநிதி சி. ஜமுனானந்தா தெரிவித்துள்ளார்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் வெளியில் செல்லும் போது முக கவசம் அணிந்து செல்லுமாறு அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button