இலங்கைசெய்திகள்

புகையிரதம் தடம் புரள்வு – மட்டு.கொழும்பு இரவு கடுகதி புகையிரத சேவைகள் மூன்று இரத்து!!

Cancellation of train services

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் வந்த உதயதேவி புகையிரதம் நேற்று மாலை சனிக்கிழமை(05) புணாணைக்கும் வெலிகந்தைக்குமிடையில் தடம் புரண்டதால் இரவு 8.15 மணிக்கு கொழும்பு நோக்கிப் புறப்படவிருந்த இரவு கடுகதி பாடும்மீன் புகையிரத சேவை மற்றும் அதிகாலை 1.15க்குப் புறப்படும் சொகுசு புகையிரத சேவை கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி மாலை 7.00 மணிக்குப் புற்படும் கடுகதி புகையிர சேவை என்பன இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு புகையிரத நிலைய பிரதம அதிபர் ஏ.பேரின்பராசா தெரிவித்தார்.

குறித்த புகையிரத பாதை சீர் செய்யப்பட்டவுடன் மீண்டும் குறித்த புகையிரத சேவை இடம்பெறுமெனவும் அவர் தெரிவித்தார். இதனால் மூன்று தூர இட புகையிர சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் – சக்தி

Related Articles

Leave a Reply

Back to top button