இலங்கைசெய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 45 பேர் கைது!!

arrested

நேற்று இரவு ஜனாதிபதி இல்லத்தை முற்றுகையிட்டு தற்போதைய பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு கோரி மக்கள் நடாத்திய கலவரம் தொடர்பில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நுகேகொட ஜூபிலி தூண் பகுதிக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொலிஸ் பஸ், ஜீப், பொலிஸ் மோட்டா சைக்கிள்கள் இரண்டிற்கு மற்றும் பொலிஸ் நீர் பிரயோக வாகனத்திற்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆண்கள் 44 பேரும் பெண்ணொருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்வபத்தின் போது ஐந்து பொலிஸார் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button