இலங்கைசெய்திகள்

நீதிமன்றத்தால் தேடப்பட்ட குற்றவாளி விமான நிலையத்தில் சிக்கினார்!!

Arrested

நைஜீரியப் பிரஜை ஒருவர் போலியான சீஷெல்ஸ் கடவுச்சீட்டுடன் மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஊடாக நாட்டை விட்டு கம்போடியாவிற்குத் தப்பிச் செல்ல முயன்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்பில் இரண்டு நீதிமன்ற வழக்குகளுக்காகத் தேடப்பட்டு வந்த நபர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இவரைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) வைத்து குடிவரவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர், ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணியளவில் கோலாலம்பூருக்குச் செல்லும் MH 178 என்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கோலாலம்பூர் மற்றும் சிங்கப்பூருக்கான விமானத்தில் ஏற முயன்றதாக குடிவரவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவரது கடவுச்சீட்டின் மீது சந்தேகம் கொண்ட குடிவரவு திணைக்கள அதிகாரி பயணி மீது சந்தேகமடைந்து மேலதிக விசாரணைகளுக்காக அவரை தலைமை குடிவரவு அதிகாரியிடம் ஒப்படைத்த போது,

அவர் அதிகாரிகளுடன் ஒத்துழைக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button