இலங்கைசெய்திகள்புலமைச்சிகரம் அமரர் வே. அன்பழகன் நினைவான கல்வி பகுதி

ஐவின்ஸ் தமிழ் இணையதளம் முன்னெடுத்த அன்பழகன் ஞாபகாரத்த இலவச கருத்தரங்கு – 1000 க்கு மேற்பட்டோர் சித்தி!!

Achieve

ஐவின்ஸ்  தமிழ் நடாத்திய கருத்தரங்குகளிலும் புலமைச்சிகரம் வே.அன்பழகன் ஞாபகாரத்தமாக வெளியிட்ட வினாத்தாள் வெளியீட்டின்  மூலமும் , சூம் ஊடான கருத்தரங்குகளிலும் நாடு பூராக பங்குபற்றிய 4000 க்கு மேற்பட்ட  மாணவர்களில 1000 க்கு மேற்பட்டோர் நேரடியாகவும் பாடசாலையூடாகவும் பயன்பெற்று இம்முறை அரச புலமைப்பரிசில் பரீட்சையி்ல்  சித்தி அடைந்துள்ளனர் .

இதில், வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்திபெற்ற சாதனையாள்களுக்கு ஐவின்ஸ் தமிழ் பாராட்டுச் சான்றிதழ்களை படிப்படியாக அனுப்பிவருகின்றது . இதில் நேற்றைய தினம் 30 மாணவர்களுக்கு குறித்த சான்றிதழ் அனுப்ப்பட்டுள்ளது. இதுவரை சான்றிதழுக்கு ஆவணங்களை எமக்கு அனுப்பத் தவறியோர் வரும் திங்கட்கிழமை வரை வட்சப்மூலம்  ஆவணங்களை அனுப்பி சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம். 

 0776044212 என்ற வட்சப் இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களைப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 எம்மால் இறுதி வேளையில் வெளியிடப்பட்ட மாதிரி வினாத்தாள்களை பாடசாலை ஊடாக பெற்று பயிற்சி பெற்றோரும் சான்றிதழ்களை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சந்தர்ப்பத்தில், இந்த கருத்தரங்குக்கு அனுசரணை வழங்கும் அன்பழகனின் உறவினர்களுக்கும் இலவசமாக வளவாளர் சேவையை ஆற்றிவரும் எமது பிரபல்ய வளவாளர்களுக்கும் பயன்பெற்ற  மாணவர்கள் சாரப்பில்  ஐவினஸ் தமிழ் நன்றியைத்  தெரிவித்துக் கொள்கின்றது .

Related Articles

Leave a Reply

Back to top button