இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
சட்டத்தரணிகள் சங்க தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!
Saliya Pieris

சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சாலிய பீரிஸ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
”கடந்த சில மாதங்களில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் சட்டத்தரணியும் நாட்டில் முக்கிய பங்கை வகிக்க முடிந்தது. இந்த இக்கட்டான தருணத்தில் அது தொடர வேண்டும்.
சங்கத்தின் தலைவர் பதவியை வகிப்பதற்கும் எனது தொழில்சார் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் நான் திருப்தி அடைகிறேன். நான் எந்த அரசியல் பதவியையும் வகிக்க விரும்பவில்லை என அதில் குறிப்பிட்டுள்ளார்.
தனது முகநூல் தளத்தில் அவர் குறித்த பதிவினை வெளியிட்டுள்ளார்.
