![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/07/23-64b9052c39b9f.jpeg?resize=600%2C400&ssl=1)
இந்த ஆண்டுக்கான (2023) தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் இன்று வியாழக்கிழமை (20) அறிவித்துள்ளது.
இதன்படி, ஒக்டோபர் 15ஆம் திகதி தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் எனவும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 27 ஆம் திகதி (திங்கட்கிழமை) ஆரம்பமாகி டிசம்பர் 21 ஆம் திகதி (வியாழன்) முடிவடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.