இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களுக்கு மாத்திரமே இன்று எரிபொருள் விநியோகம்!!

Fuel

இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் அரச ஊழியர்களுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என யாழ். அரச அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.

அரச உத்தியோகத்தர்களும் ஓய்வூதியர்களும் உறுதிப்படுத்தல் அட்டையைக் கொண்டு வரவேண்டும் எனவும் கடந்த 5ம் திகதிக்குள் எரிபொருள் பெற்றவர்கள் இதற்குள் உள்வாங்கப்படமாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தின் 23 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 6 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுகாதார உத்தியோகத்தர்களுக்கும் 17 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அரச பணியாளர்களுக்கும் எரிபொருள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button