இலங்கைசெய்திகள்

7 வயது மாணவியைத் துன்புறுத்தியதாக ஆசிரியர் மீது புகார்

School

யாழ்ப்பாணம் – சித்தன் கேணி கணேச வித்தியாலயத்தில் இரண்டாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியை ஆசிரியர் அடித்து துன்புறுத்தியதாக ஆசிரியர் மீது புகார் வழங்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பான விசாரணைகளை சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சிறுமி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார் எனவும் மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் மன ஆற்றுப்படுத்தல் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button