இலங்கைசெய்திகள்

ரம்புக்கனை சம்பவத்தில் கொல்லப்பட்டவரின் இறுதிக் கிரியை இன்று!!

Police

எரிபொருள் தட்டுப்பாடு, பொருட்களின் விலை உயர்வு என்பவற்றைச் சுட்டிக்காட்டி அரசாங்கத்திற்கு எதிராக ரம்புக்கனையில் முன்னெடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தை அடக்குவதற்காக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தினால் உயிரிழந்த சமிந்த லக்ஷனின் இறுதிக் கிரியைகள் இன்று (வெள்ளிக்கிழமை) தெவலேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிரிவடுன்னையில் இடம்பெறவுள்ளன.

பொலிஸ்மா அதிபரின் கோரிக்கையின் படி பொது ஒழுங்கை பராமரிக்க ஆயுதப்படைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

தெவலேகம, ரொக்கன மற்றும் கேகாலை பொலிஸ் பிரிவுகளில் நாளை வரை அமைதியை நிலைநாட்டுவதற்கு முப்படைகளும் பணியில் இருப்பார்கள் என அரசாங்க தகவல் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Leave a Reply

Back to top button