இலங்கைசெய்திகள்

ஏழாலையில் ஐஸ் போதைப்பொருளுடன் இரு சகோதரர்கள் கைது

ஏழாலைப் பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இரு சகோதரர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவ புலனாய்வு பிரிவினரும் சுன்னாகம் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையிலேயே 22 மற்றும் 29 வயதுடைய இரு சகோதர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 3 கிராம் 58 மில்லிக்கிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button