இலங்கைசெய்திகள்

மஹிந்தவை நெருப்பில் எரித்த மக்கள்

யாழ்ப்பாணத்திற்கு இரண்டுநாள் விஜயத்தை மேற்க்கொண்டு வருகைதந்துள்ள பிரதமர் மஹிந்தவிற்கு மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகினறனர்.

இந்நிலையில்,மட்டுவிலில் அமைக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையத்தை பிரதமர் இன்று (20) திறந்துவைத்தார்.

இந்நிலையில், பிரதமரின் வருகையைக் கண்டித்து போராட்டம் மேற்க்கொள்ள முல்லைத்தீவிலிருந்து வருகைதந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்திற்கு அருகில் பொலிஸரால் மறிக்கப்பட்டு, பஸ்ஸின் இரண்டு கதவுகளும் மூடப்பட்டு மக்கள் கீழே இறங்க விடாமல் தடுக்கப்பட்டனர்.

அதேபோன்று, போராட்டத்தை மேற்க்கொள்ள வருகைதந்த வேலன்சுவாமிகள் மற்றும் மக்களை வண்ணாத்தியான் பாலத்தடியில் பொலிஸார் மறித்து வைத்திருந்தனர்.

இந்நிலையில், பிரதமர் பொருளாதார மத்தியநிலையத்தை திறந்து சென்றுவிட்டதன் பின்னர் மட்டுவில் பொருளாதார நிலையம் செல்வதற்கு பொலிஸார் அனுமதித்தனர்.

இந்நிலையில், ஆத்திரம் அடைந்த மக்கள் மஹிந்தவின் வரவேற்பு பதாதைதகளை அறுத்தெரிந்து, தீயினால் கொழுத்தியும் தமது கவலையையும், வேதனையையும் வெளிப்படுத்தினர்.

Related Articles

Leave a Reply

Back to top button