உலகம்செய்திகள்

கூட்டுப்படை தாக்குதலால் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 130 பேர் பலி!!

world

ஏமன் நாட்டில் எண்ணெய் வளமிக்க கிணறுகளை கைப்பற்றும் முயற்சியில் கடந்த பிப்ரவரி முதல்
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக ஏமன் அரசு ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக திடீர் தாக்குதல்களில் ஈடுபட்டு வந்துள்ளது. இதற்கிடையே ஏமன் தலைமையிலான சவூதி கூட்டுப் படையினர் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது வான்வழி தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இந்த வான்வழித் தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 130 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 16 ஆயுதம் தாங்கிய வாகனங்களும் ஹவுதி கிளர்ச்சியாளர்களிடமிருந்து தகர்க்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஏமன்-சவுதி கூட்டுப் படையினரின் தாக்குதலில் 1200 ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பலியாகியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button