![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2024/05/IMG-20240521-WA0075-1024x1024.jpg?resize=708%2C708&ssl=1)
இன்றைய தினம் புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வந்த வடிவேலு ஆறுமுகம் அவர்களது 31ஆம் நாள் நினைவு தினமாகும்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2024/05/IMG-20240521-WA0076-1024x1024.jpg?resize=708%2C708&ssl=1)
தனது தந்தையாரின் நினைவு தினத்தினை முன்னிட்டு மகளான தாட்சாயினி பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றிற்கு அவரது வாழ்வாதாரத்தை உயர்த்தும் முகமாக பசு ஒன்றினை வழங்கி வைத்துள்ளதோடு
தெரிவு செய்யப்பட்ட 15 பேரிற்கு ஆடைகளும் வழங்கி வைத்துள்ளார்.
அத்தோடு ஒரு கிராமத்து உறவுகளுக்கு மதிய உணவினையும் வழங்கி வைத்துள்ளார்கள் இவரது குடும்பத்து உறவுகள்,
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2024/05/IMG-20240521-WA0078-1024x1024.jpg?resize=708%2C708&ssl=1)
தமது தந்தையாரின் நினைவாக ஏழ்மை நிலையில் உள்ளோரிற்கு நல்மனதோடு உதவிக்கரம் நீட்டிய அவரது குடும்பத்து உறவுகளுக்கு பயனாளர்கள் தமது நன்றியினை தெரிவித்துள்ளார்கள்.
பல பொதுச்சேவைகளை முன்னெடுத்து பலருக்கும் உதவியாக இருந்த தந்தையாரின் ஆத்மா சாந்திக்கு சமூக ஆர்வலர்களும் பிரார்த்தித்துள்ளனர்.