இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய (31.08.2024 – சனிக்கிழமை) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் ஒரே பார்வையில் சுருக்கமாக!!

News

1.

பொதுவேட்பாளருக்கே ஆதரவு!!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளருக்கே ஆதரவு வழங்குவது என்கிற தீர்மானம் தமிழரசு கிளிநொச்சி கிளையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

2.

தீவிரப்படுத்தப்பட்ட தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கை!!

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்களின் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகள் 9மாகாணங்களிலும் கண்காணிப்ப்பாளர்களை நிறுவியுள்ளது எனவும் அவர்கள் தத்தமது மாகாணங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் எனவும் தலைமை கண்காணிப்பாளரும் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினருமான நாச்சோ சான்சென் அமோர் தெரிவித்துள்ளார்.

3.
காணாமல் போனோர் தொடர்பில் உண்மைகளை வெளியிட வேண்டும் என செஞ்சிலுவைச்சங்கம் வலியுறுத்து!!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

4.
யாழ். பல்கலைக்கழகத்தில் போராட்டம்!!நேற்றறைய தினம், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி யாழ். பல்கலைககழகத்தில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

5.
சஜித்திற்குப் பெருகும் ஆதரவு!!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறைக்கு உட்பட்ட 191 முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button