இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!!

Whether

 மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி,நுவரெலியா,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள்ைமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்புைமாவட்டங்களிலும்  சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடமத்திய மாகாணத்திலும் புத்தளம்,ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலைமாவட்டங்களிலும்  அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். 

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை  எடுத்துக்  கொள்ளுமாறு  பொதுமக்கள்  அறிவுறுத்தப்படுகின்றார்கள்

Related Articles

Leave a Reply

Back to top button