இலங்கைசெய்திகள்

இன்றைய வானிலை அறிவிப்பு!!

Whether

 மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வட மாகாணங்களிலும்  அத்துடன் காலி, மாத்தறை மற்றும் புத்தளம்   

மாவட்டங்களிலும் இடைக்கிடையே  மழை  பெய்யக்கூடும்.

வடமத்திய மாகாணத்திலும் அத்துடன் குருநாகல் மாவட்டத்திலும்  சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

ஊவா  மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ங்களின் சில இடங்களிலும்  மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. 

மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் புத்தளம்,  ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 ‐ 45 km  வேகத்தில் அடிக்கடி  பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.  

*கடல் பிராந்தியங்களில்* 

காங்கேசன்துறை தொடக்கம் மன்னார், புத்தளம், கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 – 35 km வேகத்தில் தென் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும். 

ஹம்பாந்தோட்டை தொடக்கம்  பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு  50 ‐ 60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள்  கொந்தளிப்பாகக்  காணப்படும். 

திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை,மன்னார், புத்தளம், கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான  கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 ‐ 50 km இலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே  காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு  கொந்தளிப்பாக் காணப்படும். 

மொஹமட் சாலிஹீன்,

சிரேஸ்ட வானிலை அதிகாரி.

Related Articles

Leave a Reply

Back to top button