![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/11/whatsapp-1-690768-702723_850x460.jpg?resize=708%2C382&ssl=1)
வாட்ஸ்அப் மூலம் உங்கள் தகவல்கள், திருடப்படும் என்று டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதன்படி வாட்ஸ் அப் செயலியில் இருந்து தள்ளி இருங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
எந்த விதமான தொலைபேசிகள் மூலம் வாட்ஸ் அப்பை பயன்படுத்தினாலும் ஹேக்கர்ஸ் அந்த தொலைபேசி மூலமாக நமது தகவல்களை திருடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
உலகின் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் உங்கள் தொலைபேசியில் உள்ள தகவல்களை எளிதாக ஹேக் செய்யும் வாய்ப்பு வாட்ஸ் செயலி மூலம் நடக்கும் என பாவெல் எச்சரித்துள்ளார்.
பயங்கரவாதம் போன்ற பல்வேறு செயல்களுக்கு வாட்ஸ் அப் செயலியை தகவல் பரிமாற்றங்களுக்கு பயன்படுத்துகின்றனர்.
எனவே அது மிகவும் பாதுகாப்பாற்ற செயலி. அடுத்த மாதத்தில் இருந்து ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட சில தொலைபேசிகளில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது.
எனவே இது எந்தளவுக்கு பயன்படுத்த முடியாத செயலி என்பதை புரிந்து கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.