இலங்கைசெய்திகள்

மத்தியகிழக்கில் இருந்து நாடு திரும்பியோருக்கு கிழக்கில் தொழிற்பயிற்சி!!

Vocational training

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தில் வெளிநாட்டில் தொழில் புரிந்து நாடு திரும்பியோருக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு வவுணதீவு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (24) இடம்பெற்றது

மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்காக சென்று நாடுதிரும்பிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் பணிப்பிற்கமைவாக, பிரதேச செயலாளரின் ஆலோசனைக்கு ஏற்ப, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கீழுள்ள மண்முனை மேற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஒழுங்கமைப்பில் இப்பயிற்சி இடம்பெற்றது. இத் தொழில் வழிகாட்டல் பயிற்சியில் பிரதேசத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்

செய்தியாளர் – சக்தி

Related Articles

Leave a Reply

Back to top button