இலங்கைசெய்திகள்

வவுனியா வர்த்தகர் சங்கத்திற்கு தேர்தல் முறையில் உறுப்பினர்கள் தெரிவு!!

vavuniya

முதற்தடவையாக வவுனியா வர்த்தகர் சங்கத்தின் புதிய நிர்வாக சபைத் தெரிவு நேற்று (13) ஞாயிற்றுக்கிழமை தனியார் விருந்தினர் விடுதியில் வாக்கெடுப்பு முறைமையில் நடைபெற்றது.

வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் நகரசபை செயலாளர் ஆர் . தயாபரன், மூன்று கிராம அலுவலகர்களின் நேரடிக்கண்காணிப்பில் 19 பேர் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு சங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களினால் புதிய நிர்வாக சபைக்கு பத்து நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் .

புதிய தலைவராக மீண்டும் எஸ்.சுஜன் , செயலாளராக மீண்டும் ஆ .அம்பிகைபாகன் , பொருளாளராக மீண்டும் என்.செல்வரட்ணம் ஆகியோர் ஏகமனதாக சபை உறுப்பினர்களாக முதலில் தெரிவு செய்யப்பட்டனர் .

அதன் பின்னர் புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் பத்து பேரைத் தெரிவு செய்யும் நடவடிக்கை வாக்கெடுப்பு ஊடாக புதிய முறைமையில் முதற்தடவையாக வர்த்தகர் சங்கத்தினால் தெரிவு இடம்பெற்றது .

சிறப்பான முறையில் இடம்பெற்ற இப்புதிய நிர்வாகசபை மூன்று வருடங்கள் செயற்படுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் – கிஷோரன்

Related Articles

Leave a Reply

Back to top button