இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

பல்கலைக்கழக அனுமதி பெற்ற 14 வயது மாணவன்!!

University

மாவரமண்டிய கடவட நானமல் கல்லூரியில் கல்வி கற்கும் 14 வயதுடைய தேவும் சனஹாஸ் ரண்சிங்க என்ற மாணவன் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியுள்ளார்.

குறித்த மாணவன் வணிகவியல் பிரிவில் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுள்ளார்.

இவர் 8ம் வகுப்பில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதி 6 மாதங்களுக்கு பின், 9ம் வகுப்பில் க.பொ.த உயர் தர வணிகவியல் பிரிவில் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.

இவர், உயர்தரப் பிரிவில் மூன்று B சித்திகளைப் பெற்றுள்ளார். இதன்படி அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் நுழைவதற்குத் தகுதி பெற்றுள்ளார்.

இவரது திறமையைப் பாராட்டும் பொருட்டு, தேவும் சனஹாஸ் ரண்சிங்கவை ஊர்வலமாக வரவேற்கும் நிகழ்வு நேற்று(05.12.2022) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றுள்ளது.

முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை தேவம் குருகுல வித்தியாலயத்தில் படித்த அவர் அதன் பின்னர் நானமல் வித்தியாலயத்தில் கல்வி பயின்று வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Related Articles

Leave a Reply

Back to top button