இலங்கைசெய்திகள்

யுக்ரைனில் உள்ள இலங்கைப் பிரஜைகளுக்கான அறிவிப்பு!!

Ukraine

யுக்ரைனில் நிலவும் நிலைமையைக் கருத்தில் கொண்டு, யுக்ரைனில் எஞ்சியுள்ள இலங்கைப் பிரஜைகளைப் பாதுகாப்பாக ஒருங்கிணைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கிய்வ்க்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்றுள்ள அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு வெளிநாட்டு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

யுக்ரைனில் உள்ள இலங்கைப் பிரஜைகள் இது தொடர்பாக அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் நிறுவப்பட்டுள்ள அவசர தொலைபேசி இலக்கமான +90 534 456 94 98, +90 312 427 10 32 மற்றும் மின்னஞ்சல் முகவரியான [email protected] ஆகியவற்றிற்கு தொடர்பு கொண்டு தகவல் வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button