இலங்கைசெய்திகள்

திருகோணமலையில் மினி சூறாவளி!!

Twister

 திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று (09) மாலை வீசிய மினி சூறாவளியால் வீடுகள் பகுதியளவில் சேதமாமடைந்ததுடன், மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்தது.

அதன்படி தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் உள்ள பட்டிமேடு, புதுக்குடியிருப்பு, குன்சப்பந் திடல் கிராமங்களில் பல வீடுகளும் பயன்தரு மரங்களும் சுறாவளியால் சேதமடைந்துள்ளது.

இருளில் மூழ்கிய வீடுகள்

அத்துடன், இரு மணித்தியாலயங்களுக்கும் அதிகமான நேரம் மின் தடைப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர். மின் கம்பமும் சேதமாக்கப்பட்டதன் காரணத்தால் மின் தடைப்பட்டிருந் நிலையில் மின்சார சபை மூலமாக சீர் செய்யப்பட்டு மீண்டும் வழமைக்கு திரும்பியது.

சுழற்றியடித்த சூறாவளியில் தென்னை, வாழை மற்றும் பலா உள்ளிட்ட மரங்கள் முறிந்து வீட்டுக்கூரைமற்றும் வீதியோரங்களிலும் விழுந்ததால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். 

Related Articles

Leave a Reply

Back to top button